கே.ஐ.டி கல்லூரியின் முதலாம் ஆண்டு துவக்க விழா

கோவை கண்ணம்பாளையதில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில் நுட்பக் கல்லூரியின் மேலாண்மை மற்றும் கணினி பயன்பாட்டுத் துறைகளின் முதலாம் ஆண்டு துவக்க விழா, கல்லூரியில் இனணய வழியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அசோக் லேலண்ட் துணைத் தலைவர் உமா ராவ் மற்றும் ஐடிஒரிசோன் தலைவர் மறறும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷான் முத்துவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துணைத் தலைவர் இந்து முருகேசன், கல்லூரியின் முதல்வர் மோகன் தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், டீன்கள், மேலாண்மை துறை தலைவர் சிவஞான பாரதி, கணினி பயன்பாட்டுத் துறைத் தலைவர் விஜயகுமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இணைய வழி மூலம் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.