அவினாசி சாலையில் ரூ.1620 கோடி மதிப்பில் மேம்பாலம் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர்

தமிழகத்திலேயே நீண்ட மற்றும் உயரமான மேம்பாலமாக அமைய உள்ள கோவை அவினாசி சாலை மேம்பாலப்பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (3.12.2020) துவக்கி வைத்தார்.

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் இருந்து கோல்ட்வின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (3.12.2020) துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், எட்டிமடை சண்முகம், பி.ஆர்.ஜி. அருண் குமார், ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.