கோவை அருகே தமிழ்நாடு – கேரளா எல்லையில் 20 அடி ராஜநாகம் பிடிபட்டுள்ளது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியை அடுத்த பாட வயல் கிராமத்திற்குள் 16 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் முக்காலி வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 16 அடி நீளம் கொண்ட ராஜ நாகத்தை பிடித்தனர். தொடர்ந்து சுமார் 20 கிலோ எடை கொண்ட ராஜ நாகத்தை வனப்பகுதிக்குள் சென்றுவிடுவித்தனர்.