கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமை நினைவு கூறும் விதமாக கோவை கவுண்டம்பாளையம் ஆறாவது வார்டு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது.

இதன் அறங்காவலரான சோனாலி பிரதீப் தலைமையில் நடைபெற்ற இதில், அப்துல் கலாம் அறிமுகம் செய்து வைத்த குறைந்த எடையிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. மேலும் இது குறித்து அவர் கூறுகையில், அப்துல் கலாமின் நினைவாக தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை கவுரவிக்கும் விதமாக இது போன்று வழங்குவதாகவும் மேலும், இந்த மாதம் முழுவதும் பல்வேறு வகையிலான பயனளிக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிரதீப் ஜோஸ் உட்பட அந்த பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.