தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை கடலில் பயந்து காப்பாற்றிய காவலர் !

கடற்கரையில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றி மருத்துவமணையில் சேர்த்த காவலர் செயலை பாராட்டிய பொதுமக்கள்.

புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். இவர் கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை கண்டார் உடனே சுதாரித்து கடலில் இறங்கி மூதாட்டியை வெளியே இழுத்து கரைக்கு கொண்டு வந்தார். மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிறகு விசாரித்ததில் புதுச்சேரி தருமபுரி பகுதியை சேர்ந்தவர் என்றும், வீட்டில் அவருடைய கணவருடன் ஏற்பட்ட சண்டையால் மன உளைச்சல் ஏற்பட்டு கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அவருக்கு அறிவுரைக்கூறினர். தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய காலவரை உயரதிகாரிகள் பாராட்டினர்.