தூய்மைப் பணியாளர்களுக்கு அசைவ விருந்து

சமூதாய சேவை பணியில் ஈடுபட்டு வரும் தனது பகுதியில் உள்ள  300 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தனது கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு அசைவ விருந்து வழங்கி அசத்தியுள்ளார் அ.தி.மு.க. உறுப்பினரும், அம்மா சேவா சேரிட்டபிள் டிரஸ்டின் அறங்காவலருமான  சோனாலி பிரதீப்.

கோவையில் கொரோனா கால நேரங்களில் மலைவாழ் மக்கள், தூய்மைப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் கணவரும், டிரஸ்டின் துணை அறங்காவலரும் ஆன பிரதீப் ஜோஸ் தனது பிறந்த தினத்தை P.N.T காலனியில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டாடினார். விழாவை முன்னிட்டு தனது பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை தமது இல்லத்திற்கே வரவழைத்து அறு சுவை உணவு வழங்கி அசத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், தனது பிறந்த நாளில் சமுதாய சேவை பணியில் உள்ளவர்களை ஏதாவது ஒரு வகையில் அங்கீகரிக்கும் விதமாக இந்த சேவையை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தம்முடைய பிறந்த நாளில் தூய்மைப் பணியாளர்களுக்கு அசைவ விருந்து வழங்கிய இவருடைய இந்த சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.