கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று(12.10.2020) தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வாகங்களின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை மருத்துவர்களுடன் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மேற்கு மண்டல காவல்துறை துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரநாயர், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் இராம துரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) மரு.காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.கிருஷ்ணா, துணை இயக்குநர் மரு.ரமேஷ்குமார், தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.