ஆர்.கே. ரோலர் ட்ராபி முதலாம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி

கோவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பார்வையாளர்கள் இன்றி அரசு விதித்துள்ள நடைமுறைகளுடன்  துவங்கிய முதல் கிரிக்கெட் தொடர் போட்டியை ஜே.ஆர்.டி.குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

கொரோனா கால ஊரடங்கில் இருந்து அரசு சில தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து  கோவையில் ஆர்.கே. ரோலர் ட்ராபி சார்பாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பர்லி கிரவுண்டில் அக்டோபர் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெறுகிறது.

இதன் துவக்க விழாவில் ஜே.ஆர்.டி.குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் துவக்கி வைத்தார். ரஞ்சித் மற்றும் கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த போட்டிகளில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட  பல்வேறு பகுதிகளை சேர்ந்த 32 அணியினர் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

பார்வையாளர்கள் இன்றி,அரசு விதித்துள்ள நடைமுறைகளுடன் வீரர்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்தால் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழாவில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மணிமேகலை, கோமதி காட்டுதுரை மற்றும் அந்த பகுதியினர் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெறும் முதல் மூன்று அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசுகளும், எல்.இ.டி டிவி போன்ற சிறப்பு பரிசுகளும் வழங்க உள்ளதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.