இன்று 448 பேருக்கு தொற்று உறுதி

கோவையில் இன்று 448 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவையில் இன்று பீளமேடு, கணபதி, சிங்காநல்லூர், வடவள்ளி, ராமநாதபுரம், சரவணம்பட்டி, உக்கடம், குனியமுத்தூர், பொள்ளாச்சி, காரமடை, மேட்டுப்பாளையம், சூலூர் மற்றும் ரத்தினபுரி உட்பட வெவ்வேறு இடங்களை சேர்ந்த 448 பேருக்கு தொற்று உறுதியானது.

இதனைத் தொடர்ந்து கோவையில் இதுவரை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 933-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று மூவர் உயிரிழந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 வயது பெண், 76 மற்றும் 66 வயது முதியவர்கள் இன்று உயிரிழந்தனர். கோவையில் 479 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 628 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் இதுவரை 30 ஆயிரத்து 690 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 4 ஆயிரத்து 764 பேர் சிகிச்சையில் உள்ளனர்.