கோவையில் ஓணம் பண்டிகையினை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் வருகின்ற திங்கள்கிழமை (31.8.2020) ஓணம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் கோவையில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, வருகின்ற 31.08.2020 அன்று ஓணம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் கோவை மாவட்டத்தில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 12.09.2020 அன்று  கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களும், வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகின்றது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட 31.08.2020 அன்று கோவையிலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான  அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, ஓணம் பண்டிகையை சமூக இடைவெளியுடனும் பாதுகாப்பாகவும் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டார்.