கோவை : நாடு முழுவதும் 74வது சுதந்திர தின விழா இன்று (15.8.2020) கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவையில் மாநகராட்சி அலுவலகத்தில் வழக்கமாக மாநகராட்சி ஆணையாளர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுதந்திர தினம் எளிமையாக கொண்டாடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முன்னதாகவே தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று (15.8.2020) சுதந்திர தினம் எளிமையாக கொண்டாட்டப்பட்டது.
இன்று காலை கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கொடியேற்று வைத்தார். இதனை தொடர்ந்து, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதற்காக ரத்தினம் கல்லூரி சார்பில் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம் அவர்களால் ‘கோவிட் வாரியர்’ என்ற விருதினை மாநகராட்சி ஆணையாளருக்கு வழங்கினார்.