பேருந்து நிலைய நுழைவு வாயில் சரிந்து விழுந்து விபத்து

உக்கடம் பேருந்து நிலைய நுழைவு வாயில் போர்டு சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நேற்று நள்ளிரவு வந்த லாரி ஒன்று உக்கடம் பேருந்து நிலைய நுழைவு வாயில் போர்டின் மீது மோதியதில் சரிந்து விழுந்தது. ஏற்கனவே மழை பெய்திருந்த காரணத்தால் வழுவிழந்து நின்றிருந்த அந்த நுழைவு வாயில் லாரி மோதியதும் சரிந்தது.

இரவு நேரம் என்பதால் உயிர்சேதம் எதுவும் இல்லாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து, ராட்சத கிரேன் மூலம் அந்த போர்டு பத்திரமாக அகற்றப்பட்டது.