தலை சுற்ற வைக்கும் தங்கத்தின் விலை

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல துறைகள் வீழ்ச்சியை சந்தித்தாலும் தொடர்ந்து ஏற்றத்தை கண்டு வரும் ஒன்று தங்கத்தின் விலை தான். சமீப காலமாக தினம் ஒரு சாதனையை செய்து வருகிறது. இருப்பினும் வரலாற்றில் இல்லாத அளவில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில், தங்கத்தின் விலையானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 9 ரூபாய் அதிகரித்து, 5ஆயிரத்து 208 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்து 41ஆயிரத்து 664 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 72 ரூபாய் 70 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 72ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.