வீர சாகச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

துணிவு மற்றும் வீர சாகச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது.

துணிச்சல்  மற்றும் விர சாகசச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்க்கு விண்ணப்பிக்கலாம். உரிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரிவான தன் விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக அலுவலகத்தில் ஜூலை 29 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் குறிப்பிடப்பட்டுள்ளது.