பெரியார் குறித்து அவதூறு பரப்பியவரை கைது செய்ய கோரிக்கை

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சமூக வலைதளங்களில் பெரியார் குறித்து அவதூறு பரப்பியவரை கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து கழகத்தினர் அளித்த மனுவில், அன்னூரை சேர்ந்த நந்த குமார் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ‘இன்று உலக அளவில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் புதிய போட்டோ’ என்று எழுதி முருகனின் காலடியில் தந்தை பெரியார் தலையை வைத்து மிதிப்பது போன்று பதிவு செய்து உள்ளார். மேலும், அவரது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக பதிவுகளை பதிவிட்டுள்ளார். இது பொது அமைதியை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே உடனடியாக அந்த நபரை கைது செய்ய வேண்டும், என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு அளிக்க 50க்கும் மேற்பட்டோர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வந்திருந்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.