இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து 79 பேர் ‘வீடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 79 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இங்கு கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற அண்டை மாவட்டத்தை சேர்ந்த கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 44 ஆண்கள், 35 பெண்கள் என மொத்தம் 79 பேர் இன்று பூரண குணம்டைந்து வீடு திரும்பினர்.

மேலும், 300க்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.