கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துவைக்கிவைத்தார் மாநகராட்சி ஆணையாளர்

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கொடியசைத்து துவைக்கிவைத்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்கு, சாலைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை படுத்துவதற்க்காக 10 டிராக்டர், 2 வஜ்ரா வாகனங்கள், ஆட்டோக்களை பயன்படுத்தி கிருமி நாசினி தெளிக்கும் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏர்படுத்தும் பணிக்கு 40 ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டது. இதன் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி மற்றும் தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த பணிக்காக 150 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் இந்த விழாவில் பேசிய மாநகராட்சி ஆணையாளர். உங்களின் பணி மேன்மை மிக்கது, தெற்க்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தொற்று அதிகமாக உள்ளதாக நான் அறிய வருகிறேன். தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பணிகளை ஒருநாளுடன் முடித்துக் கொள்ளாமல் தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு தொற்று இல்லா மண்டலமாக கோவை தெற்கு மண்டலத்தை மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் காவல்துறையினர் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து. கண்டோன்மண்ட் பகுதிகளில் யாரும் வெளிவராத வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென காவல்துறையினருக்கு வேண்டுகோள்விடுத்தார்.