பறக்கும் படையினருடன் மாநகராட்சி ஆணையாளார் கள ஆய்வு

கோவையில் பல்வேறு கொரோனாதடுப்பு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களும், பறக்கும் படையிருடன் மாநகராட்சி ஆணையாளார், துணை ஆணையாளர் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளார் ஷ்ரவன்குமார்ஜடாவத்சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட், ஸ்ரீ ராம் நகர் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், போத்தனூர் அம்மா உணவகத்திலும், கஸ்தூரி கார்டன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், பறக்கும் படையினருடன் கள ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், சாரதா மில் ரோடில் நடைபெற்ற மருத்துவ முகாமை துவக்கி வைத்து கபசுர குடிநீர் மற்றும் சாது மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.