பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை அறிவுறுத்திய மாநகராட்சி ஆணையாளர்

கோவை வடவள்ளி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத். ஆய்வு மேற்கொண்டார்.

வடவள்ளி பகுதியில் குருசாமி நகரில் நடைபெற்று வரும் ரூ.75 லட்சம் மதிப்பிலான விளையாட்டு பயிற்சி அரங்க கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டார் மற்றும் வடவள்ளி பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், போதிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.