உலக மக்கள் தொகை தின உறுதி மொழி

உலக மக்கள் தொகை தினம் இன்று கொண்டாடப்படுவதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்பல நலத்துறை சார்பில் இந்த உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி உறுதிமொழி ஏற்றனர்.

தன்னம்பிக்கையும், தற்சாபும் கொண்ட நம் நாட்டு மக்களுக்கு எந்த நெருக்கடியான சூழலிலும் குடும்ப நல திட்ட சேவைகளை செய்ய உறுதி செய்வோம் என்ற மையக்கருத்தை முன்வைத்து உறுதி மொழி ஏற்றனர். குடும்ப நல திட்டங்களை மக்கள் இயக்கமாக மலர செய்ய முழுமையாக அர்ப்பணிப்போம் என்றும் உறுதி ஏற்றனர்.