பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திடீர் ஆய்வு

கோவையில் ரெட் ஜோனாக அறிவிக்கபட்டிருந்த ஆர்எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள பூ மார்க்கெட் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து இவர் பேசுகையில், கோவை மாவட்டத்தின் மிகப்பெரிய பூ மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா மற்றும் அனைத்து பணிகளும் சரியான முறையில் இயங்குகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாததால் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே கோவையிலும் இதுபோன்று நடக்காமல் இருக்க தற்போது மாநகராட்சி அதிகாரிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே சமூக இடைவெளியுடன் அமைத்துக் கொடுக்கப்பட்ட கடைகளை மேலும் அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுத்துவரப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட செயல் தான் இந்த ஆய்வு என்றார்.