கேரளாவில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று யாரும் நோயிலிருந்து குணமடையவில்லை. நோய் பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 3 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றார்.