வெளிநாட்டு தமிழக மக்களை அழைத்து வர முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்

வானதி சீனிவாசன்

தமிழகத்தில் இருக்கும் பிற மாநில மக்கள் அவரவர் மாநிலத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்துவருகிறது. இவர்கள் அனைவரும் ரயில் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

அதேபோல் ரயில் மட்டுமல்ல, விமானம் & கப்பல் மூலமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை அழைத்து வர தமிழக முதல்வர் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.