புதிய கிருமி நாசினி தெளிப்பான் வாகனங்களின் பணிகள் துவக்கம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாநகராட்சியின் சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக கிருமி நாசினி மருந்து தெளிப்பான் வாகனங்களின் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் ரூ.20.00 லட்சம் மதிப்பிலான ஒரு வஜ்ரா இயந்திரமும், ரூ.39.75 லட்சம் மதிப்பிலான மூன்று டிராக்டருடன் கூடிய இயந்திரங்கள், ரூ.10.00 லட்சம் மதிப்பிலான மூன்றுஜாக்டோ டிராக்டருடன் கூடிய இயந்திரங்கள், ரூ.115.00 லட்சம் மதிப்பிலான ஜெட்டிங் இயந்திரங்கள் இரண்டும் ஆகமொத்தம் ரூ.184.75 லட்சம் மதிப்பிலான கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வாகனங்களின் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாநகரப் பொறியாளர் லட்சுமணன், நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார் செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.