மண்டல அளவிலான டேக்வோண்டோ போட்டி

பள்ளி கல்வி துறை சார்பாக ஈரோடு மண்டல அளவிலான டேக்வோண்டோ போட்டி நாமக்கல் அருகே கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பிரைட் பப்ளிக் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் எஸ்.முகுல் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். பள்ளியின் முதல்வர் அனுராதா ராஜா மாணவனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.