நேரு நகர் அரிமா சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு

கோவை மாவட்ட காவல்துறை கோவில்பாளையம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் தங்கம் தலைமையில் நேரு நகர் அரிமா சங்கம் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சார்பில் இன்று சுமார் 500 தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் முதியோர் இல்லம் வடமாநில இளைஞர்களுக்கு கோவை காளப்பட்டி அருள்மிகு கொங்கு ஸ்ரீ வடுகநாதர் திருக்கோவில் மண்டபத்தில் உணவு தயாரித்து வழங்குகிறார்கள்.

இதனை நேரு நகர் அரிமா சங்கம் மண்டல தலைவர் காளியப்பன், முன்னாள் தலைவர் பாஸ்கர், செயலாளர் செந்தில்குமார், முன்னாள் வட்டாரத் தலைவர் லோகநாதன், பிந்து பாலு, குறிஞ்சி மலர் பழனிச்சாமி, குபேந்திரன், காளப்பட்டி துரைசாமி, செயலாளர் நந்தகுமார், தலைவர் லாலா ஜி முத்துராஜ், ஜிஎஸ்டி உறுப்பினர் ரகுராமன், வட்டாரத் தலைவர் ரகுபதி, கனகராஜ், பொருளாளர் தேவராஜ், ராமதாஸ், ஹரிஷ், பரிமளம், காளப்பட்டி சாமி, காளப்பட்டி பாலசுப்ரமணியம், காளப்பட்டி மனோகரன், காளப்பட்டி வடுகநாதர் காளப்பட்டி சுப்பிரமணி ஆகியோர் முன்னிலையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

144 தடை உத்தரவு உள்ளவரை கோவை மாநகராட்சி கிழக்குப் பகுதி வார்டு 33, 34, 35, 36 தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.