மலிவு விலை நடமாடும் காய்கறி அங்காடி

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஒன்றாக நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கிவைத்தார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஏற்கனவே பல முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒன்றாக பொதுமக்கள் காய்கறிகள் வாங்குவதற்காக மளிகை கடைகளுக்கு சென்று வரிசையில் நின்று வாங்குவதை விட அவர்களின் வீட்டுக்கே சென்று மலிவு விலையில் காய்கறிகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கிவைத்தார். இதில் 12 அத்தியாவசிய காய்கறிகள் 100 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.