கோழியால் கொரோனா வரும் என நிரூபித்தால் 1 கோடி பரிசு

சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்று சமூக வலைத்தளங்களில் பரவிய புரளியால் பிராய்லர் கோழி கிலோ 30 ருபாய் வரை விற்க ஆரம்பித்து விட்டன. அதனால், தற்பொழுது பொதுமக்கள் அதிக அளவில் கோழி இறைச்சியை தவிர்த்து வருகின்றன.

இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்தது வரும் முட்டை கோழிப் பண்னையாளர் வர்த்தக சங்கம், தற்பொழுது சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகி சுப்பிரமணி தற்பொழுது சிக்கன் சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் 1 கோடி ரூபாய் பரிசு என அறிவித்துள்ளார்.