கேஐடி கல்லூரியில் பொங்கல் திருவிழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழிநுட்ப கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பாரம்பரியமான விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்திராக கல்லூரியின் தலைவர் பொங்கலூர் நா பழனிசாமி மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதோடு தமிழர்களின் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி மற்றும் நாட்டு மாடுகள் கண்காட்சி நடைபெற்றது. மேலும் நமது பாரம்பரிய கரகாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், சேவல் சண்டை போன்றவை நடைபெற்றது.