ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரியின் பி.எஸ்.சி நர்சிங் 7 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கல்வி தலைவர் அசோகன்   மற்றும் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ அபிராமி கல்வி குழுமங்களின் தலைவர் பெரியசாமி, இயக்குநர்கள் செந்தில் குமார், பால முருகன், கல்லூரி முதல்வர் சைலா ஐசாக், இயக்குநர் டாக்டர். குந்தவி தேவி, டாக்டர். உமா தேவி, டாக்டர். சுச்சரிதா, பேராசிரியர் ஐரின் மெர்ஸி மற்றும் ஸ்ரீ அபிராமி கல்வி குழுமங்களின் நிர்வாக அதிகாரி குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.