நூல் வெளியீட்டு விழா

திருக்குர் ஆன் கலைகளஞ்சியம் சார்பில் அத்தாட்சிகள் என்ற நூலை கோவையை சேர்ந்த எம்.அமீர் அல்தாப் எழுதி உள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா கோவை போத்தனூர் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லாஹ் தலைமை தாங்கி நூலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது இறைவன் குர்ஆனில் பல அத்தாட்சிகளை கூறியுள்ளார். நாமும் இறைவனின் அத்தாட்சிகளை நேரில் பார்க்கிறோம். இறைவனின் அத்தாட்சிகளை பார்த்து மனிதன் பக்குவப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன், தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா மொய்னுதீன், ஹை கோர்ட் முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா, கே.மூஸா, கே எம் முகமது அலி, யு.ஏ.கே.பசீர் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.