நண்பர்கள் தினம்

கோவை நேருநகர் அரிமா சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து விளாங்குறிச்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் 150 குழந்தைகளுக்கு மதிய உணவு சாப்பிட 150 தட்டுகள் மற்றும் தண்ணீர் ட்ரம் ஆகியவற்றை வழங்கி  இனிப்புடன் மதிய உணவு அரிமா செந்தில்குமார்  வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் நேரு நகர் அரிமா சங்கத் தலைவர் லாலா முத்துராஜ், மண்டலத்தலைவர் காளியப்பன், செயலாளர் நந்தகுமார், முன்னாள் வட்டாரத் தலைவர் லோகநாதன், பொருளாளர் தேவராஜ், அரிமா கிருஷ்ண தேவராஜ், ஜிஎஸ்டி உறுப்பினர் ரகுராம், கலாம் அறக்கட்டளை பாலசுப்ரமணியம், யுவராஜ், விக்னேஷ், சூர்யா, கிருஷ்ணமூர்த்தி, மனோகர், பள்ளி தலைமையாசிரியை தேன்மலர், சத்துணவு அமைப்பாளர் ஃபயஸ்மேரி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.