அரை கிலோமீட்டர் வரை கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி !

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடல் திடீரென உள்வாங்கியிருப்பதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் கடற்பகுதிக்கு வழக்கம் போல் மீன் பிடிக்கச் செல்வதற்கு மீனவர்கள் வந்து பார்த்த போது, கடல் துறைமுக வாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சுற்றி தண்ணீர் இல்லாததைக் கண்டு அதிர்ந்தனர்.

ஐந்து அடிக்கு குறையாமல் இருக்கும் தண்ணீர், இன்று தண்ணீரே இல்லாமல் அரை கிலோ மீட்டர் வரை கடல் உள்வாங்கியிருப்பதைக் கண்டு மீனவர்கள், கடலுக்கு செல்லாமல் வீடு திரும்பினார்.

பெரும்பாலும் புயல் களங்களில் இதுபோல, கடல் அதிக தூரம் உள்வாங்கும் என கூறப்படும் நிலையில், இது மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.