சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு விருது

கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் உலக மகளிர் தின விழா அண்மையில், கல்லூரியின் மகளிர் அமைப்புத் தலைவி R. N. உமா அவர்களால் கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக சுதந்திர இயக்கத்தின் தேசிய இயக்குனரும், ருஹுமா டிசைன்சின் முதன்மை தலைமை அலுவலருமாகிய கேத்தரின் ராஜா அவர்கள் கலந்து கொண்டு தனது சிறப்பு உரையில், அனைத்து பெண்மனிகளும் தன்னுள் உள்ள சக்தியை பயன்படுத்தி வாழ்வில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும், சமுதாய பிரச்சனைகளை மன தைரியத்துடன் எதிர் கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். விழாவின் முக்கிய நிகழ்வாக சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு விருது எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் தலைமை வணிக அலுவலர் சுவாதி ரோஹித் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்து. விழாவின் தலைமை உரையை கல்லூரி முதல்வர் எம்.பால்ராஜ் அவர்கள் வழங்கினார்கள்.