எஸ்.என்.எஸ் அகாடமியின் 10 ஆம் ஆண்டு விழா

எஸ்.என்.எஸ் அகாடமியின் சி.பி.எஸ்.இ. ஃபிங்கர் பிரிண்ட் பள்ளியின் 10 ஆம் ஆண்டு விழா, சரவணம்பட்டியில் உள்ள எஸ்.என்.எஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப இயக்குநர் நளின் விமல்குமார் தலைமை தாங்கினார். நிகழ்வில் கடந்த ஆண்டின் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளியின் ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.