மணிபிளான்ட் செடியின் மகிமை

நம்முடைய பெரும்பாலான வீடுகளில் மணி பிளாண்ட் செடியை வைத்திருப்போம். மணி பிளாண்ட் வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று சொல்வார்கள். ஆனால் நமக்கு அப்படி எதுவும் நடக்கவே இல்லையே என்று கவலைப்படுகிறவராக இருந்தால் இந்த ஃபாலோ பண்ணுங்க..வீட்டில் செல்வம் பெருகும்..

மணி பிளாண்ட் வீட்டுக்குள்ளும் வைக்க முடியும். வீட்டிற்கு வெளியேயும் வைக்க முடியும். தண்ணீருக்குள்ளும் வைத்து வளர்க்க முடியும். அந்த மணிபிளாண்டை வீட்டில் எந்தெந்த இடத்தில் வைத்து வளர்த்தால் செல்வம் பெருகும், வளம் பெருகும் என்று சில விஷயங்களை பல்வேறு நாடுகளில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

வடக்கு அல்லது கிழக்கு : மணி பிளாண்டை வீட்டில் வடக்கு திசை அல்லது கிழக்கு திசையை நோக்கி வைப்பது நல்லது. ஏனெனில் பெரும்பாலான வீடுகளில் பணப்பெட்டியை வடக்கு மற்றும் கிழக்கு திசை நோக்கி தான் வைத்திருப்பார்கள் மணிபிளாண்டில் இருந்து கிடைக்கும்நேர்மறை ஆற்றலால் அதனுடைய வளம் வீட்டிலும் பெருகும் என்பது நம்பிக்கை.

​வளம் அதிகரிக்க : தென்கிழக்கு பகுதியில் மணி பிளாண்டை வைப்பது வீட்டின் வளத்தை அதிகரிக்கும். இந்த திசையில் வைக்கும்போது வீட்டில் பணப் பிரச்சினை வராது என்று சீனர்கள் நம்புகிறார்கள்.

ஜன்னலோரம் : மணி பிளாண்டை முடிந்தவரையில் ஜன்னல் ஓரத்தில் வைத்து விடுங்கள். அப்படி நன்னலோரத்தில் வைக்கும் போது முழுமையாகவும் சூரிய வெளிச்சம் இருக்காது. நிழலும் இருக்கும். இப்படி நேரடியாக சூரிய வெளிச்சம் முழுமையாக வீட்டுகுள் செல்லாமல் பாதி நிழலாகவும் இருப்பது வீட்டுக்குள் வளம் அதிகரிக்கும்.