உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் துறை சார்பில் புதன்கிழமை பேரணி நடந்தது.
இப்பேரணியை கல்லூரி முதல்வர் பொன்னுசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுற்றுலா தினம் குறித்த பதாகைகளை ஏந்தி ரேஸ்கோர்ஸ் சாலையில் வலம் வந்தனர்.
இந்நிகழ்வில் துறை தலைவர் பிரேம் கண்ணா, பேராசிரியர் செபாஸ்டின் கலந்துகொண்டனர்.