சச்சிதானந்த பள்ளி சார்பில் மினி மாரத்தான்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி சார்பில் “உலக அமைதி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் நடத்தியது. இதில் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

மேட்டுப்பாளையம் பிளாக்தண்டர் பகுதியில் தொடங்கி பள்ளியின் விளையாட்டு மைதானம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரையில் நடைபெற்ற ஓட்டத்தினை, மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் மேட்டுப்பாளையம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கோபால்சாமி ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். மினி மாரத்தானில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.