பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற கே.பி.ஆர். கல்லூரியின் உடற்கல்வி பயிற்சியாளர்

இந்தியா பளுதூக்கும் சங்கங்களின் கட்டமைப்பின் சார்பில் திருச்சியில் தேசிய அளவிலான பளு தூக்கும் (Power Lifting) போட்டி பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் உடற்கல்வித் துறையின் பயிற்சியாளரான ஆனந்தகுமார் சீனியர் பிரிவில் 66 கிலோ பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். அவரை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.