தானிஷ் அஹமது தொழில் நுட்ப கல்லூரியில் இரத்த தான முகாம்

கோவை கா.கா.சாவடியில் அமைத்துள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்ப கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அமைப்பும் கே.ஜி. மருத்துவமனையும் இணைந்து இரத்த தான முகாம் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடத்தியது. இதில் கல்லூரியின் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இரத்த தான முகாமிற்க்கு கல்லூரியின் தலைமை நிர்வாக இயக்குனர் அக்பர் பாஷா மற்றும் தலைமை செயல்  நிர்வாக அதிகாரி தமீஸ் அகமது தலைமை வகித்தனர். முதல்வர் கே.ஜி.பார்த்திபன் முன்னிலை வகித்தார். கோவை கே.ஜி. மருத்துவமனை மருத்துவர் விவேகா பிரியதர்ஷினி, முகாம் ஒருங்கிணைப்பாளர் விஜய் ஆனந்த் மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ்குமார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.