என்.ஜி.பி. கல்லூரி நாள் விழா

கோவை டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி நாள் விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் ஓ.டி.புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார். கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் கல்விசார் இயக்குநர் முத்துசாமி தலைமையுரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் இதில் டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணன், வணிகவியல் புல முதன்மையர் பானு தேவி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.