திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சிங்காநல்லூர், கரும்புக்கடை மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

தி.மு.க அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கியும், வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்தோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வு தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழிகாட்டுதலில் நடைபெற்றது. கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் வரவேற்புரையாற்றினார்

கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் முனைவர் சபாபதி மோகன், மதுரை அலெக்சாண்டர் ஆகியோர் பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.

பகுதி பொறுப்பாளர்கள் சிங்கை மு.சிவா, எஸ்.எம். சாமி, மா. நாகராஜ், இரா. சேரலாதன், ஆர்.எம்.சேதுராமன், ப.பசுபதி, வி.ஐ. பத்ரூதீன், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் தென்னவர் செல்வம், ராமகிருஷ்ணன், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன் ஆகியோர் முன்னிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில தீர்மானக்குழு மு.இரா. செல்வராஜ், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் அ. திராவிடமணி, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு, நிலைக் குழுத் தலைவர்கள், சிங்காநல்லூர் தொகுதி மாமன்ற உறுப்பினர்கள், வட்டக் கழகப் பொறுப்பாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.