அரிய நாளை நினைவுகூர்ந்த இந்துஸ்தான் பள்ளி மாணவர்கள்

கோவை, இந்துஸ்தான் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அரிய நாளான (22.02.2022) நாளை நினைவுகூறும் வகையில் நின்று அனைவரையும்  கவர்ந்தனர்.

இந்துஸ்தான் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் குழந்தைகள், 22.02.2022 தேதியான இந்த அற்புதமான அரிய நாளை வரவேற்கும் விதமாகவும், இத்தேதியின் எண்களைப் போல் அமர்ந்து யோகாசனம் செய்து அனைவரையும் கவர்ந்தனர்.

மேலும், அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இயற்கை வளங்களை காப்போம் மற்றும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிப்போம் போன்ற விழிப்புணர்வு உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள 320 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நாளை நினைவூட்டும் வகையிலும், விழிப்புணர்வையும் ஏற்படுத்திய குழந்தைகளை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஸ்பிரபு, பள்ளியின் முதல்வர் செண்பகவள்ளி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.