சுவிரா ஆக்ரோ சார்பில் மரசெக்கு எண்ணை அறிமுகம்

ரைஸ் ப்ரான் எண்ணெய் தயாரிப்பாளர்களான சுவிரா ஆக்ரோ நிறுவனம் தனது மரசெக்கு நல்லெண்ணெய், கடலெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி கோவை ராடிசன் ப்ளூ ஓட்டலில் நடைபெற்றது. இதனை, கோவை கே ஜி மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி. பக்தவத்சலம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் கே. ராமசாமி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன், தொழிலதிபர் ஜி.வி.குமார் மற்றும் கோவை ராடிசன் ப்ளூ தலைவர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இதுகுறித்து சுவிரா அக்ரோ நிறுவனத்தின் இயக்குனர் ராஜ் அஸ்வின் கூறுகையில்: “இந்த எண்ணெய்கள் அரை மற்றும் ஒரு லிட்டர் பெட் பாட்டிகளில் கிடைக்கும். எண்ணெயின் ஒவ்வொரு பாட்டிலுடனும் அந்தந்த எண்ணெய் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய தகவல்களை கொண்ட ஒரு கையேடு கிடைக்கும்”. என்றார். மேலும், மரசெக்கு எண்ணையின் நற்குணங்களையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.