கே.பி.ஆர் கல்லூரியில் சுதந்திர தின விழா அணிவகுப்பு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில், 75 வது சுதந்திர தின விழா  ஞாயிற்றுக்கிழமை (15.08.2021) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு கோவை மாவட்டத்தின், முன்னாள் துணை ஆணையர், சக்கரவர்த்தி ராஜகோபால கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிச் சிறப்பித்தார்.

பின்னர் தேசிய மாணவர் படையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாணவர்களின் தற்காப்புக் கலை நிகழ்வினைக் கண்டுகளித்தார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வாழ்த்துரை வழங்கி, சிறப்பு விருந்தினரைச் சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர் தமது உரையில், மாணவர்களுக்கு நாட்டுப்பற்று, இயற்கை விவாசயம், சுய ஒழுக்கம் குறித்தும், மாணவர்கள் கற்க வேண்டிய நூல்கள் சிலவற்றையும் பரிந்துரைத்தார்.