கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சுங்கராவ் நியமனம்

கோவை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த குமாரவேல் பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராஜகோபால் சுங்கராவ் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி கமிஷனராக குமாரவேல் பாண்டியன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோவை மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனராக இருக்கும் குமாரவேல் பாண்டியன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமூக நலத்துறை இயக்குனர் (பொறுப்பில்) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கோவை மாநகராட்சி கமிஷனராக, சென்னை பெருநகர மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனராக பதவி வகித்த ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை கோவை மாநகராட்சி கமிஷனராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.