பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்த பையாக்கவுண்டர்

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பையாக்கவுண்டர் ஆர்.கிருஷ்ணன் தனது சொந்த ஊரான காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார்.