அதிமுக சார்பில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் எஸ்.பி.வேலுமணி செல்வபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை (22.3.2021) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களிடம் அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சியை எப்படியாவது கலைத்து விடலாம் என ஸ்டாலின் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நானும், அமைச்சர் தங்கமணியும் அந்தத் திட்டங்களை முறியடித்தோம். அதனால் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்.
இந்த தொகுதியில் கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து, மளிகை சாமான் மற்றும் சத்து மாத்திரை போன்றவற்றை கொடுத்துள்ளேன். ஆனால் கொரோனா காலத்தில் எந்த பணியும் செய்யாத திமுகவினர் தற்போது வாக்கு கேட்கின்றனர் என கூறினார்.