பாரதமாதா அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற 5 இல்லங்களுக்கு உதவி

கோவை உடையாம்பாளையம் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற 5 இல்லங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

அதில் கரங்கள் சேவாஸ்ரமம், செஷயர் இல்லம், அரவணைக்கும் அன்பு இல்லம், சமாதானம், முதுமக்கள் மனை உள்ளிட்ட இல்லங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், ஏழை எளிய குடும்பங்களுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் கௌரிசங்கர், கார்த்திக், சரவணன், கமலக்கண்ணன், சக்திவேல், ராஜா, ராஜேஷ், இளங்கோ, மணி, சுரேஷ், பிரவின், ரமேஷ், கெளதம், நடராஜ், டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.