ஒரே நாடு ஒரே கார்டு திட்டம் நடைமுறைக்கு வந்தது

தமிழக முதல்வரின் உத்தரவின்படி கோவை மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே கார்டு திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் அமைந்துள்ள 1419 நியாயவிலைக் கடைகளுக்கு புதிய சர்வர் இணைப்பு கொடுக்கப்பட்டு கை விரல் ரேகை பதிவு செய்து பொருள்கள் பெற்றுக்கொள்ளும் நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ஒரு சில இடங்களில் மட்டும் தற்காலிகமாக சர்வர் வேலை செய்வது சில சமயங்களில் தடைபடுகிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய சென்னை உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில், உரிய அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே, பொதுமக்கள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, நியாய விலைக் கடைகளின் திறக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 12.00மணி வரை மதியம் 2.00 மணி முதல் மாலை 7.00மணி வரை தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டு, அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்கும் பொது விநியோகத்திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும்.